Sunday, December 14, 2008

மடத்தனமாய்...!



வருடிச் செல்லும் காற்று.......
சில நேரம் குளுமையாய் ..
சில நேரம் இதமாய்,


வந்தே தீரும் இளங்கதிர்.....
சில நேரம் மிதமாய்....
சில நேரம் மிதமிஞ்சி,


இவைகள் இரண்டும் இயற்கையின் மிடுக்கு
நம்மைப் போல் .செயற்கை அல்லாமல் ...


சில விளங்காதவை என்னிலும் உண்டு
சில விளங்காதவை உன்னிலும் உண்டு ...
ஒரு சில மவுனங்களால்.....


இருந்தும் இன்னும் பகிர்ந்து கொள்கிறோம் ..
நான் உனக்கு தெரியாமலும் நீ எனக்கு தெரியாமலும் !!!!!!!!!
அதுவும் மடத்தனமாய்.


இதில் விதைக்க படுவது என்னவோ ...
நம் எண்ணங்கள்மட்டுமே...விளைந்தவையோ!
நம்மை எதிர் பார்க்காமல்...சொல்லப்போனால் முதிர்ச்சியாய்...

1 comment: