Sunday, December 14, 2008

கனவே...!!!


நீண்டு கொண்டே செல்கிறது
இரவுகள் போல் கனவுகளும்...

இரவின் போர்வைக்கு விடுப்பு கொடுத்து
இன்றுடன் என்னை இணைத்துக் கொண்ட பின்பும்
என்னுடன் கைகோர்த்து நடக்கிறது
நிழல் போல் தொடர்ந்து...!

ஆயிரம் கோடி ஆசைகளிருந்தாலும்
அரை நொடியில் அடிமையாகி விடுகின்றன
உன்னைத்தவிர என்னிடத்தில்....

உனக்குள் நான் புகுந்து விடவா?
................அல்லது....................
எனக்குள் நீ புதைந்து போவாயோ?

புதைந்து,,, புகைந்து போகாதே!
லட்சியம் எனும் கனவே...!!!

No comments:

Post a Comment