Thursday, July 23, 2009

அன்றிலிருந்து இன்று வரை ...


வேறெதுவும் தெரியாதே
உன் நினைவுகளில் அடைப்பட்ட
இவனின் நெஞ்சத்திற்கு...
மஞ்சத்திருக்கும்
தெரிந்து விட்டதோ....இனி
இவன் உறங்கப்
போவதில்லையென
எள்ளி நகைத்து
ஏளனம் செய்கிறதே
ஓ..தலையணைக்குள்
நான் புதைத்த கண்ணீர்
கசிந்து விட்டதோ ...


விடுமுறை கொடுத்தும்
விலகாமல் கண்சிமிட்டியே
சிரிக்கின்றன எனதறையின்
மின்விளக்குகள்... கள்ளி
அதிலுமா உன் ஆட்சி...
இரு விடியட்டும்
விளக்கம் தேடலாமென
விழித்திருந்தேன் ......
சிறைபட்ட உன்
நினைவால் இரவு பகல்
தெரியவில்லை அன்றிலிருந்து
இன்று வரை ...

Tuesday, July 21, 2009

என் நட்பைத் தேடி


என் நட்பைத் தேடி...
பயணமேற்க்கொள்ளும்
போதெல்லாம்

உன் நினைவு பாதை மேல்
என் பயணங்கள்...

உன்னால் வரையப்பட்ட
கவிதை தோழி ..நான்

ஆதலால் இன்னும்
வரைவாகவே நம் நட்பு
உன் அன்பைத் தேடி

மீண்டும் மீண்டும்
எனது பயணங்கள் ..

உதிர்ந்த இடத்தில்
மீண்டும் துளிர்க்கும்
இலை போல்

உன் நினைவு என்னுள்
எழும்போதெல்லாம்
நொடிக்கொருமுறை
பிறப்பெடுக்கிறேன் நித்தமும்
ஜனித்த நோக்கமும்
புரிந்து விட்டது இன்று
ஜனனம் ஜனனம் இனி
உன்னில் சேரும் வரை ..........

Sunday, July 12, 2009

பட்டியலில்

உன் ஒருத்தியால்,

காணாமல் போனவர்கள் ,

பட்டியலில் என் பெற்றோரும்....

Friday, July 10, 2009

வீழ்த்தினாய் இன்றும்

நீண்ட வரி கவிதை பெண்ணே நீ
முற்றுப் புள்ளியாக நான்...
விழி பார்த்து முகம் பார்க்காமல்
வீழ்த்தினாய் நேற்று வரை ...
விளக்கமளித்தும் விளங்கவில்லை
வீழ்த்தினாய் இன்றும்...

மாலையிடு

உறங்கவே இல்லையடி நான்
நீ உதிர்த்த வார்த்தைகளால் ...


இரு கோர்வையாக்குகிறேன்
கல்லறையில் வந்தாவது மாலையிடு
...

Saturday, July 4, 2009

நீண்ட புருவத்தை

நிலை இல்லா கண்ணாடியில்

நிலை நாட்டினால்பெண்னொருத்தி_அதில்

சிவந்து சிரித்ததென்னவோ அவளின்

அடிக்கடி செல்போன் சிணுங்கள் மட்டுமே...