Friday, December 19, 2008




வென்மேகங்கள் விடைபெற்று
கருநிறத்தை உடுத்திக்கொண்ட தருணம்
விரித்துக்கொண்டாள் தோகையை
அரங்கேற்றம் நடத்த மயிலானவள் ...

ஈரக்காற்று முகத்தில் அறைந்ததும்
இடக்கண் மூடி வலக்கையின் உதவியுடன்
ஜன்னல் சாத்தினாள் பஸ் பயணத்தின்
ஜன்னலோர இருக்கைக்காரி ..........

தன் மேனியை சாரல் தொட்டதும்
இட வந்த முத்தத்தை நிறுத்தி
சேலை தலைப்பால் அவன் தலை மூடி
வீட்டுக்குள் புகுத்திக் கொண்டால் தன்னை ... கைக்குழந்தைகாரி



விற்று விட்ட வெள்ளரி போக
மழையை வசை பாடிக்கொண்டே
எஞ்சியவற்றை கூடையில் திணித்தாள்
சாலையோரம் கடை நடத்தும் கிழவி...



நாலு கால் கயிற்றுக் கட்டிலில்
ஒரு கால் உள்ள ஊன்று கோள் துணையுடன்
மழையிடம் இருந்து தன்னை
பத்திரபடுத்திக்கொள்ள எழும் முதியவர் ...




இதழை தாங்குவதற்கே கர்வம் கொண்ட மொட்டுக்கள்
அதன் மீது விழுந்த மழைத்துளிகளின் அழகில்
நறுமணம் பரப்புவதை நிறுத்தி விட்டன
என்னைப்போல் தன்னை மறந்து


மழை காலத்தில் நனைந்தபடி
நான் கண்ட நிஜங்கள் இவை யாவும்











3 comments:

  1. oru oru nigalvumey alagu GK...

    //இதழை தாங்குவதற்கே கர்வம் கொண்ட மொட்டுக்கள்
    அதன் மீது விழுந்த மழைத்துளிகளின் அழகில்
    நறுமணம் பரப்புவதை நிறுத்தி விட்டன
    என்னைப்போல் தன்னை மறந்து//

    mazhai nerathula adiga manam thaney varum GK...

    mazhaila nanaiyura sugathavida verenna sugam irukka mudiyum... :) :)

    ReplyDelete
  2. naanum mottukkalum mazhaiyai rasiththa nimidathithil nigalntha unmai pa..mazhaiyay kandu engalai maranthanilaiyul thontriyathu

    ReplyDelete
  3. hmmm appo adikadi mazhaila nanjudunga Ganesha... appo ungala marantha nilaila inum neraya kavithai ezhuthuveenga... :):)

    ReplyDelete