Thursday, January 1, 2009

சில தருணங்கள்


மரணப்படுக்கையில் இருப்பவனைப் பார்த்து
ஒன்றும் பயமில்லை என்று கூறி
அவனின் இறுதிக் கதவும் சாத்தப்பட்டத்தை
அறிந்து அழாமல் நான் நின்ற போதும்...

உணவு வேளையில் இளைப்பாறவும் சில நேரத்தில்
வாத்தியார் கையில் எதிரியாகவும் இருந்த
பள்ளி புளியமரம் வேரோடு சாய்ந்தது ஒரு மழைக்காலத்தில்
என் கதை கேட்கும் பேசா தோழன் மறைந்த போதும்...

பத்து மாதம் சுமந்தால் தாய்,பல வருடம் சுமந்தால்?
காலத்தின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க....என்னை
இருபத்தியொரு வருடம் சுமந்த வீட்டை விட்டு
பேருந்து பயணத்தில் நான் இருந்த போதும் ...!

குழலினிது யாழினிது.....மழலைச் சொல் என்ற
குறள் பாடிய எங்கள் தமிழ் ஆசிரியை
குழந்தை வரம் வேண்டி துதிப்பாடினாள் கருவறை கடவுளிடம் ..
அவளை நான் கடந்து சென்ற போதும்...!

எனது நினைவுகளுக்கு உறுதியான
உயிரோட்டத்தைகொடுத்துக் கொண்டே
தனது உயிரை சிறுகச் சிறுக மாய்த்துக் கொள்ளும்
என் பேனாவின் நிலையை எண்ணிய போதும்...

இருள் என்ற இயற்கையை நீக்க
என்னதான் பிரகாசமாய் தீபம் எரிந்தாலும்
அதில் தினமும் தீக்குளிக்கும் பல ஆயிரம்
விட்டில் பூச்சிகளை காண நேரும் போதும்....!

தண்ணீரிலே இருந்தாலும் பசுமை காணா!
மரங்களை பார்க்கும் போதும்..முற்று பெறாமல்
முடிந்த இந்த கவிதையின் மீத வரிகள்
மீண்டும் மீண்டும் என்னுள் எழும்போதும்....

கனமான இதயத்துடன் தான்
சில தருணங்களை கடக்கின்றேன் ....
ஆம் .....வலியுடன் ....!!!!!!

3 comments:

  1. kannukkum, arivukkum, manathukkum therindey ippadi patta valikalodu vazhvathey vazhakkai...
    azhagai sollirukeenga Ganesha...

    kavithaiyinai padikkum bodhey manathil ganam koodikondey pogirathu....

    ReplyDelete
  2. கவிதை அருமை:)

    ReplyDelete
  3. Kavithi Super

    Sila Nerangkalil Sila MAnitharkal pola

    Sila Tharunangkali Sila Vali Miguntha , Kanam Miguntha Tharunangkal

    Nam parkum Alakana silai Pala Valikalai
    thangki Kondu atahiyum thandi Vanthu than

    ReplyDelete