Tuesday, July 21, 2009

என் நட்பைத் தேடி


என் நட்பைத் தேடி...
பயணமேற்க்கொள்ளும்
போதெல்லாம்

உன் நினைவு பாதை மேல்
என் பயணங்கள்...

உன்னால் வரையப்பட்ட
கவிதை தோழி ..நான்

ஆதலால் இன்னும்
வரைவாகவே நம் நட்பு
உன் அன்பைத் தேடி

மீண்டும் மீண்டும்
எனது பயணங்கள் ..

உதிர்ந்த இடத்தில்
மீண்டும் துளிர்க்கும்
இலை போல்

உன் நினைவு என்னுள்
எழும்போதெல்லாம்
நொடிக்கொருமுறை
பிறப்பெடுக்கிறேன் நித்தமும்
ஜனித்த நோக்கமும்
புரிந்து விட்டது இன்று
ஜனனம் ஜனனம் இனி
உன்னில் சேரும் வரை ..........

3 comments:

  1. //என் நட்பைத் தேடி...
    பயணமேற்க்கொள்ளும்
    போதெல்லாம்
    உன் நினைவு பாதை மேல்
    என் பயணங்கள்...//

    நட்பு என்றுமே ஒரு சுகமான பயணம்தான் தோழா...

    //உன்னால் வரையப்பட்ட
    கவிதை தோழி ..நான்
    ஆதலால் இன்னும்
    வரைவாகவே நம் நட்பு//

    வரைவு சீக்கிரம் அசல் ஆகட்டும்...

    //உன் அன்பைத் தேடி
    மீண்டும் மீண்டும்
    எனது பயணங்கள்..//

    ஹம்ம்ம்ம்...

    //உதிர்ந்த இடத்தில்
    மீண்டும் துளிர்க்கும்
    இலை போல்
    உன் நினைவு என்னுள்
    எழும்போதெல்லாம்
    நொடிக்கொருமுறை
    பிறப்பெடுக்கிறேன் நித்தமும்//

    ரொம்ப நல்லாருக்கு கணேஷா இந்த வரிகள்...
    வர வர நீங்க ரொம்ப அழகா வார்த்தைகள் உபயோகிக்க ஆரம்பிச்சுட்டீங்க..

    //ஜனித்த நோக்கமும்
    புரிந்து விட்டது இன்று
    ஜனனம் ஜனனம் இனி
    உன்னில் சேரும் வரை ..........//

    ஹம்ம்ம்ம் FANTASTIC.....

    தொடர்ந்து எழுதுங்க கணேஷா....

    ReplyDelete
  2. நட்பின் தேடல் வரிகள் மிக மிக அருமை குமார்:-)

    ReplyDelete